القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن أوقات الصلاة فهرس الموقع

துஆக்கள் மற்றும் திக்ர்கள் பற்றிய பகுதி :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : தன் இறைவனை நினைவு கூறுகிற மனிதனுக்கும் மற்றும் தன் இறைவனை நினைவு கூறாத மனிதனுக்கும் உதாரணம் உயிருள்ளவனையும் உயிரற்றவனையும் போன்றதாகும்'. (ஆதாரம் : புஹாரி).

இவ்வாறு நபியவர்கள் வரணித்தமைக்கு காரணம் மனித வாழ்வின் பெறுமானம் அல்லாஹ்வை திக்ர் செய்யும் அளவில்தான் தங்கியுள்ளது என்பதினாலாகும்.

பதில் :1 – திக்ர் செய்வது அல்லாஹ்வை திருப்திப்படுத்தும்.

2- ஷைத்தானை துரத்தும்.

3- தீங்குகளிலிருந்து ஒரு முஸ்லிமுக்கு பாதுகாப்புக் கிடைக்கும்.

4- திக்ர் செய்வதனால் (மகத்தான) கூலியும் வெகுமதியும் கிடைக்கும்.

பதில் : ' லாஇலாஹ இல்லல்லாஹ் ' என்ற திக்ராகும். (உண்மையான வணங்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை) ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா.

அல்ஹம்து லில்லாஹில்லதி அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின்னுஷூர்'. பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்பெற்று எழச்செய்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரித்தாகட்டும். மேலும் அவனிடமே (நமது) மீளுதல் உள்ளது. ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

அல்ஹம்து லில்லாஹில்லதி கஸானீ ஹாதஸ்ஸவ்ப வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வா'. பொருள் : இந்த ஆடையை அணியச் செய்து இதனை எனது எவ்வித ஆற்றலோ சக்தியோ இன்றி வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும். ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி, மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்

பதில் : பிஸ்மில்லாஹ் (என்று கூறுவேன்). (ஆதாரம் : திர்மிதி) .

பதில் : 'அல்லாஹும்ம லகல் ஹம்து, அன்த கஸவ்தனீஹி, அஸ்அலுக கைரஹு வகைர மா ஸுனிஅ லஹு, வஅஊது பிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸுனிஅ லஹு'

யா அல்லாஹ்! உனக்கே புகழனைத்தும் உரித்தாகட்டும். நீதான் எனக்கு இதனை அணியத்தந்தாய். இதன் நன்மையையும் இது எந்த நன்மைக்காக தயாரிக்கபட்டதோ அதனையும் நான் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் தீங்கை விட்டும், இது எத்தீங்குக்காக தயாரிக்கப்பட்டதோ அதன் தீங்கை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.

பதில் : புத்தாடை அணிந்த ஒருவரைக் கண்டால் அவருக்காக பின்வருமாறு பிரார்த்திக்கவும் : "துப்லீ வயுஹ்லிபுல்லாஹு தஆலா", (நீ இதனை பழுதாகும் வரை அணிந்திடுவாய். மேலும் இதற்கு பகரமாக அல்லாஹ் ஆடைகளை உமக்கு வழங்கிடுவானாக.). (ஆதாரம் : அபூதாவூத்).

அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல் கபாஇஸ்' பொருள் : யாஅல்லாஹ் ! ஆண் பெண் ஷைத்தான்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

குஃப்ரானக' என்பதாகும். (யா அல்லாஹ் ! என்னை நீ மன்னிப்பாயாக). ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.

பதில்: பிஸ்மில்லாஹ் (என்று கூறுவேன்). இந்த ஹதீஸ் அபூதாவூத் மற்றும் ஏனைய ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதில் : “அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹூ, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு” (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளன் யாருமில்லை என்றும்; மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவனின் அடியாரும் துதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறேன். (ஆதாரம் : முஸ்லிம்.)

பதில் : "பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹ், லாஹவ்ல வல குவ்வத இல்லா பில்லாஹ்". (அல்லாஹ்வின் திருப்பெயரால் (புறப்பட்டுச் செல்கிறேன்) என் காரியங்களை அல்லாஹ்விடம் முழுமையாக ஒப்படைத்து அவன் மீது நம்பிக்கை வைத்து விட்டேன். மேலும், அல்லாஹ்வின் உதவியில்லாமல் எதிலிருந்தும்; தப்பிப்பதற்கான சக்தியோ வல்லமையோ (எனக்குக்குக்) கிடையாது). ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.

பதில் : 'பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி கரஜ்னா வஅலல்லாஹி ரப்பினா தவக்கல்னா' (அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு நுழைந்தோம் . அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு வெளியேறினோம். மேலும் எங்கள் காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து அவனின் மீது நம்பிக்கை வைத்தோம்) எனக் கூறிவிட்டு தனது குடும்பத்தினருக்கு ஸலாம் கூறவேண்டும். (ஆதாரம் : அபூதாவூத்).

பதில் : 'அல்லாஹும்மப்தஹ்லி அப்வாப ரஹ்மதிக' (யா அல்லாஹ்! உனது அருளின் வாயில்களை எனக்காகத் திறந்துவிடுவாயாக!). (ஆதாரம் : முஸ்லிம்)

பதில் : 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக'. பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நான் உனது அருளிலிருந்து கேட்கிறேன்.

பதில் : முஅஸ்ஸின் கூறுவது போல் நானும் கூறுவேன். அவர் ஹய்ய அலஸ்ஸலாஹ் - ஹய்ய அலல்பலாஹ் - என்று கூறினால் 'லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' என்று கூறுவேன். ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவாய். (ஆதாரம் : முஸ்லிம் .) அல்லாஹம்ம ரப்பஹாதிஹித் தஃவதித் தாம்மஹ், வஸ்ஸலாதில் காஇமா, ஆதி முஹம்மதனில் வஸீலத வல் பழீலத, வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்' (யா அல்லாஹ் ! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!. (ஆதாரம் : புஹாரி.)

பாங்கிற்கும் இகாமத்திற்கு இடையில் பிரார்தனையில் ஈடுபடு, ஏனெனில் அவ்வேளை கேட்கும் பிரார்த்தனை மறுக்கப்படாது. அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பதில் : 1 ஆயதுல் குர்ஸி ஒதுதல். "அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம், லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம், லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி, மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும், வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல, வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறுதூக்கமோ, உறக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று. அவன் மிக உயர்ந்தவன்; மிக்க மகத்துவமானவன். (ஸூறதுல் பகரா :255) 2- பின்வரும் சூறாக்களை ஓதுவீராக. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (1) "குல் ஹுவல்லாஹு அஹத்" . (2) "அல்லாஹுஸ்ஸமத்" . (3) "லம் யலித் வலம் யூலத்" . (4) "வலம் யகுல்லஹு குகுபுவன் அஹத்" . மூன்று தடவைகள். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (1) "குல் அஊது பிரப்பில் பலக்". (2) "மின் ஷர்ரி மா கலக்". (3) "வமின் ஷர்ரி காசிகின் இதா வகப்". (4) "வமின் ஷர்ரின் னப்பாஸாதி பில்உகத்". (5) "வமின் ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்". மூன்று தடவைகள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (1) "குல் அஊது பிரப்பின்னாஸ்". (2) "மலிகின்னாஸ்". (3) "இலாஹின்னாஸ்". (4) "மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ்". (5) "அல்லஃதீ யுவஸ்விஸு பீ ஸுதூரின்னாஸ்". (6) "மினல் ஜின்னதி வன்னாஸ்". மூன்று தடவைகள் 3- 'அல்லாஹும்ம அன்த ரப்பீ லா இலாஹ இல்லா அன்த, கலக்தனீ, வஅன அப்துக, வஅன அலா அஹ்திக வவஃதிக மஸ்தத ஃது, அவூது பிக மின்ஷர்ரி மா ஸனஃது, அஃபூவு லக பினிஃமதிக அலய்ய, வஅபூஃவு பிதன்(ம்)பீ, ஃபக்ஃபிர்லீ; ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த'. (யா அல்லாஹ்! நீயே என் எஜமான். உன்னைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. என்னை நீ அடிமையாகவே படைத்தாய், உனது உடன்படிக்கையின் படியும், வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமைகளை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன். எனக்கு உன்னால் வழங்கப்பட்ட அருள்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். நான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன். ஆகவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்கக் கூடியவன் வேறு யாருமில்லை). (ஆதாரம் : புஹாரி).

பிஸ்மிகல்லாஹும்ம அமூது வஅஹ்யா'. பொருள் : யா அல்லாஹ்! உன்னுடைய பெயரைக் கொண்டே நான் உறங்கி விழித்தெழுகிறேன். ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

பதில் : 'பிஸ்மில்லாஹ்' என்று கூறுவேன்.

ஆரம்பத்தில் பிஸ்மில் கூற மறந்து விட்டால் பின்வருமாறு கூறவும் :

பிஸ்மில்லாஹி பீ அவ்வலிஹீ வஆகிரிஹீ' . (ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறி உண்ணுகிறேன்). ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.

பதில் : 'அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வஃ'. (எனது எவ்வித சக்தியோ ஆற்றலோ இன்றி எனக்கு இந்த உணவை வழங்கி உண்ணச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.) ஆதாரம் : அபு தாவூத், இப்னு மாஜா, மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்

பதில் : 'அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஸக்தஹும், வஃக்ஃபிர் லஹும் வர்ஹம்ஹும்'. பொருள் : (யா அல்லாஹ்! நீ அவர்களுக்கு அளித்தவற்றில் பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக! மேலும் அவர்களின் குற்றங்களை மன்னித்து, அவர்களுக்கு கிருபை செய்வாயாக!). (ஆதாரம் : முஸ்லிம் .)

பதில் - தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவார். (நிச்சயமாக புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம்)

அதற்கு அவரின் சகோதரர் அல்லது தோழர் யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன்மீது கருனைபொழிவானாக) என்று கூறட்டும்.

அதற்கு தும்மியவர் 'யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும்' (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டுவானாக! உங்கள் நிலமைகளை சீராக்குவானாக!) என்று கூற வேண்டும். (ஆதாரம் : புஹாரி).

பதில் : 'ஸுப்ஹானகல்லாஹம்ம வபிஹம்திக அஷ்ஹது அல்லா இலாஹ இல்லா அன்த அஸ்தக்பிருக வஅதூபு இலைக'. இதன் பொருள்: இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உண்மையான வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் கோரி உன்னிடமே மீள்கிறேன். ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி மற்றும் ஏனைய ஹதீத் கிரந்தங்கள்

பதில் : பிஸ்மில்லாஹ், வல்ஹம்துலில்லாஹ் "ஸுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹூ முக்ரினீன், வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்", அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர், ஸுப்ஹானகல்லாஹும்ம இன்னி ழலம்து நப்ஸீ பஃபிர்லீ பஇன்னஹு லா யஃபிருத்துனூப இல்லா அன்த. பொருள் : 'பிஸ்மில்லாஹ்'; - அல்லாஹ்வின் திருப்பெயர்கூறி இப்பயணத்தை ஆரம்பிக்கிறேன் 'அல்ஹம்து லில்லாஹ்' எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. இதன் மீது ஏற எவ்விதச் சக்தியுமற்றவர்களாக இருந்த எமக்கு இதனை வசப்படுத்தித் தந்த அல்லாஹ் மிகத்தூயவன் எனத் துதிக்கிறேன். நிச்சயமாக நாம் எங்கள் இரட்சகனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்களாக உள்ளோம். (அல்ஹம்து லில்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), (3 தடவை) அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) ( 3 தடவை). யா அல்லாஹ்! நீ தூயவன்! எனக்கே நான் அநீதி இழைத்து கொண்டேன்! நீ என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில் பாவங்களை மன்னிப்பவன்; உன்னைத் தவிர வேறு யாருமில்லை. ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.

பதில் :'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர். "ஸுப்ஹானல்லதீ ஸக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன்.வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்". அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக பீ ஸபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா, வமினல் அமலி மாதர்ழா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸபரனா ஹாதா, வத்வி அன்னா புஃதஹு, அல்லாஹும்ம அன்தஸ் ஸாஹிபு பிஸ்ஸபரி வல் கலீபது பில் அஹ்லி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் வஃஸாஇஸ் ஸபர், வகஆபதில் மன்ளரி, வஸூஇல் முன்கலபி பில் மாலி வல் அஹ்லி'. பொருள்: அல்லாஹு அக்பர்: அல்லாஹ் மிகப் பெரியவன் ( 3 தடவை) இதன் மீது ஏற சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்த அல்லாஹ் மிகத்தூயவன் எனத் துதிக்கிறேன். நிச்சயமாக நாம் எங்கள் இரட்சகனிடம் திரும்பிச்செல்வோராக உள்ளோம். யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா அல்லாஹ்!! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு இலகுபடுத்திடுவாயாக! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடுவாயாக! (இதன் தூரத்தை இலகுவாக கடக்கக்கூடியதாக ஆக்கிடுவாயாக!) யா அல்லாஹ்!! நீயே பயணத்தில் தோழனாகவும் எமது குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறாய். யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான காட்சிளிலிருலுந்தும், மேலும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

பயணத்திலிருந்து திரும்பி வந்தால் இந்த துஆவுடன் சேர்த்து பின்வரும் துஆவை ஓதவும் :

ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன, லிரப்பினா ஹாமிதூன்'. பொருள் : எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர்களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம். (ஆதாரம் : முஸ்லிம் .)

பதில் : 'அஸ்தவ்திஉகுமுல்லாஹல்லதி லா தழீஉ வதாஇஉஹு'. பொருள் : அல்லாஹ்விடம் நான் உங்களை ஒப்படைக்கிறேன். அவனிடம் ஒப்படைக்கப்பட்டவைகள் எதுவும் வீணாகிவிடுவதில்லை. ஆதாரம் : அஹ்மத், இப்னு மாஜா.

பதில் : 'அஸ்தவ்திஉல்லாஹ தீனக வஅமானதக வகாவதீம அமலிக'. பொருள் : உமது மார்க்த்தையும் உமது அமானிதத்தையும் (பொறுப்பு மற்றும் கடமை) உமது செயலின் முடிவுகளையும் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். (ஆதாரம் : அஹ்மத், திர்மிதி.).

பதில் : 'லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு லஹுல் முல்கு வலஹூல் ஹம்து, யுஹ்யீ வயுமீது, வஹுவ ஹய்யுன் லா யமூது, பியதிஹில் கைர், வஹுவ அலா குல்லி ஷைய்இன் கதீர்'. பொருள் : உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, அவன் தனித்தவன்; அவனுக்கு எந்த இணையாளருமில்லை. ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்கே உரியன. அவனே உயிரளித்து மரணிக்கவும் செய்கிறான், அவன் மரணிக்காத நித்திய ஜீவன், அவன் கைவசமே எல்லா பாக்கியமும் நிறைந்திருக்கிறது, மேலும் அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றல் உடையவன். ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா.

பதில் : 'அஊது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர் ரஜீம்' என ஓதுவார். பொருள் : சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றேன். ஆதராம் : புஹாரி முஸ்லிம்.

பதில் : 'ஜஸாகல்லாஹு கைரா' என்று கூறுவேன். பொருள் : அல்லாஹ் உங்களுக்கு கூலி தருவானாக. (ஆதாரம் : திர்மிதி) .

பதில் : பிஸ்மில்லாஹ் (என்று கூறுவேன்) (ஆதாரம் : அபூதாவூத்).

பதில் : 'அல்ஹம்துலில்லாஹில்லதீ பிநிஃமதிஹீ ததிம்முஸ் ஸாலிஹாத்'. பொருள் : எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது !அவனது அருளினாலேயே நற்செயல்கள் யாவும் முழுமை பெறுகின்றன!'. (ஹாகிமும் ஏனையோரும் இதனை அறிவித்துள்ளனர்.)

பதில் : 'அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்'. பொருள் : எல்லா நிலையிலும் அல்லாஹ்வைப் போற்றுகிறேன்!. (ஆதாரம் : ஸஹீஹுல் ஜாமிஃ).

பதில் : ஒரு முஸ்லிம் 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராகாதுஹு' என்று கூறுவார். (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் அருள்வளமும் உண்டாகட்டும்).

அதற்கு பதிலாக தனது சகோதரன் "வஅலைக்குமு ஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபராகாதுஹு" என்று கூறுவார். (உங்கள் மீதும் சாந்தியும் அவனது அருளும் அவனது அருள்வளமும் உண்டாகட்டும்). (ஆதாரம் : அபூதாவூத், திர்மிதி).

பதில் : 'அல்லாஹும்ம ஸய்யிபன் நாபிஆ'. (யா அல்லாஹ்! பயனளிக்கும் மழையைப் பொழியச் செய்வாயாக!). (ஆதாரம் : புஹாரி.)

பதில் : 'முதிர்னா பிபழ்லில்லாஹி வரஹ்மதிஹி'. (அல்லாஹ்வின் அருளினாலும், அவனது கிருபையினாலும் எமக்கு மழை கிடைத்தது). ஆதாரம் : புஹாரி முஸ்லிம்.

பதில் : 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா வஅஊதுபிக மின் ஷர்ரிஹா'. பொருள் : யா அல்லாஹ்! இந்தக் காற்றின் நன்மையை நான் உன்னிடம் கோருகிறேன். மேலும் இதன் தீமையை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். ஆதாரம் : அபூதாவூத், இப்னுமாஜா.

பதில் : 'ஸுப்ஹானல்லதீ யுஸப்பிஹுர் ரஃது பிஹம்திஹீ வல்மலாஇகது மின் கீபதிஹீ'. பொருள்: எவனது புகழைக்கொண்டு இடி துதிக்கின்றதோ, எவனைப் பயந்து வானவர்கள் துதி செய்து புகழ்கின்றார்களோ அத்தகைய அல்லாஹ்வை நான் துதிக்கிறேன். ஆதாரம் : முஅத்தா மாலிக்.

பதில் : 'அல்ஹம்து லில்லாஹில்லதீ ஆபானி மிம்மப்தலாக பிஹி வபழ்ழனீ அலா கஸீரின் மிம்மன் கலக தப்ழீலா'. (எதனைக் கொண்டு உன்னைச் சோதித்தானோ அதிலிருந்து எனக்கு அல்லாஹ் ஆரோக்கியமளித்து, அவன் படைத்த பெரும்பாலான படைப்புகளை விட என்னை சிறப்பாக்கி வைத்த அவனுக்கே எல்லாப் புகழும்). (ஆதாரம் : திர்மிதி) .

பதில் : ஹதீஸில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது 'உங்களில் ஒருவர் தனது சகோதரனில் அல்லது தன்னில் அல்லது தனது செல்வத்தில் ஆச்சரியப்படத்தக்க விடயங்களை கண்டால் அருள்வளம் கிட்ட வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்; ஏனென்றால் கண்ணேறு உண்மையானது'. ஆதாரம் : அஹ்மத், இப்னு மாஜா.

பதில் : 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லைத அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத். (யா அல்லாஹ்! இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீதும், அன்னார் குடும்பத்தினர் மீதும் அருள் புரிந்தது போல்,முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தவர் மீதும் அருள்புரிவாயாக. நீயே புகழுக்குரியவன் கீர்த்திமிக்கவன். யா அல்லாஹ்! நீ இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) மீதும், அவரின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும், செழிப்பையும் அள்ளிப் பொழிந்தது போல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் உன் அருள்வளத்தையும செழிப்பையும் பொழிவாயாக ! நீயே புகழுக்குரியவன் கீர்த்திமிக்கவன்). ஆதராம் : புஹாரி முஸ்லிம்.