القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن البطاقات الإسلامية فهرس الموقع

கேள்வி 31: (அல் கவ்ப்) பயம் என்றால் என்ன? ஆதரவு வைப்பது என்பது யாது? அவற்றிற்கான ஆதாரங்களைக் குறிப்பிடுக.

பதில் : பயமென்பது (அல் கவ்ப்) அல்லாஹ்வையும் அவனது தண்டனையும் பயப்படுவதைக் குறிக்கும்.

(அர்ரஜாஉ) ஆதரவு வைப்பது என்பது அல்லாஹ்வின் வெகுமதியையும் மன்னிப்பையும் மற்றும் கருணையையும் ஆதரவு வைப்பதைக் குறிக்கும்.

இதற்கான ஆதாரம் பின்வரும் இறைவசனமாகும் : "(அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை அழைத்துப் பிரார்த்திக்கின்றார்களோ அவர்களில் (அல்லாஹ்வுக்கு) மிகவும் நெருக்கமானவர்களாய் ஆவதற்கு தமது இரட்சகனின் பால் நெருங்கும் வழியைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்த்து ஆதரவு வைக்கின்றனர்.மேலும் அவனது தண்டனையை அஞ்சுகின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது". (ஸூறதுல் இஸ்ரா : 57) மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான் : "நிச்சயமாக நான் மிக்க மன்னிப்போனும் நிகரற்ற அன்புடையோனுமாவேன், மேலும் எனது தண்டனை நோவினை தரக்கூடிய தண்டனையாகும் என்று எனது அடியார்களுக்கு நபியே நீர் அறிவிப்பீராக!". (ஸூறதுல் ஹிஜ்ர் :49-50)