القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن البطاقات الإسلامية فهرس الموقع

கேள்வி 1 : ஸூறதுல் பாத்திஹாவை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?

பதில் : ஸூறதுல் பாத்திஹாவும் அதன் விளக்கவுரையும் :

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம். மாலிகி யவ்மித்தீன். இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன். இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம். (நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!). ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மஃழூபி அலைஹிம் வலழ் ழால்லீன். ((அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல). (பாதிஹா : 1 - 7).

விளக்கவுரை (தப்ஸீர்) :

ஸூறதுல் பாதிஹா மூலம் அல்குர்ஆன் ஆரம்பிக்கப்பட்டதால் அல் பாத்திஹா-திறவுகோள்- என்றபெயரால் இவ்வத்தியாயம் அழைக்கப்படுகிறது.

1- (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்) என்பதன் கருத்து, அல்லாஹ்வின் பெயரை கூறுவதன் மூலம் பரக்கத்தை வேண்டியவனாகவும் அவனைக்கொண்டு உதவிதேடியவனாகவும் அல்குர்ஆனை ஓத ஆரம்பிக்கிறேன்.

(அல்லாஹ்) என்பது உண்மையாக வணங்கப்படக் கூடியவன் என்பது பொருளாகும். இப்பெயர் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியது. அவனைத் தவிர வேறு எவறும் இப்பெயர் மூலம் அழைக்கப்படமாட்டார்கள்.

(அர்ரஹ்மான்)- (அளவற்ற அருளாளன்) என்பது விசாலமான பரந்த அருளுக்குச்சொந்தக்காரன். அவனின் அருள் எல்லாவற்றிலும் வியாபித்துக்காணப்படுகிறது.

(அர்ரஹீம்)- (நிகரற்ற அன்புடையோன்) என்பது இறைவிசுவாசிகளான முஃமின்களுக்கு விசேடமாக அருள்பாளிப்பவன் என்பதைக் குறிக்கிறது.

2- (அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்ற வசனம் அனைத்து வகையான புகழும் பாராட்டும் பரிபூரணத்தன்மையும் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே உரியன என்பதாகும்.

3- (அர்ரஹ்மானிர்ரஹீம்) "அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்" என்பது அல்லாஹ் விசாலாமான பரந்த அருளுக்குச்சொந்தக்காரன். அவனின் அருள் எல்லாவற்றிலும் வியாபித்துக்காணப்படுகிறது என்பதையும், அவன் இறைவிசுவாசிகளான முஃமின்களுக்கு விசேடமாக அருள்பாளிப்பவன் என்பதையும் காட்டுகிறது.

4- (மாலிகி யவ்மித்தீன்)- (மறுமை நாளின் அதிபதி) என்பது மறுமை நாளைக் குறிக்கிறது.

5- (இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்)- (உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும் தேடுகிறோம்) அதாவது, உன்னை மாத்திரமே வணங்குகிறோம். உன்னிடம் மாத்திரமே உதவியும் தேடுகிறோம் என்பதாகும்.

6- (இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்)- (இறைவா எங்களுக்கு நேரான வழியை காட்டுவாயாக) என்பதன் கருத்து: இஸ்லாம் மற்றும் நபிவழியின் பால் நேர்வழி பெருவதைக் குறிக்கும்.

7- (ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மஃழூபி அலைஹிம் வலல்ழால்லீன்) (நீ அருள்புரிந்தோர் வழியில்.(அது உன்) கோபத்திற்குள்ளானவர்களினதோ வழிதவறியவர்களினதோ வழி அன்று.) அல்லாஹ் அருள்புரிந்தோரின் வழி என்பது, நபிமார்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த நல்லடியார்கள் சென்ற பாதையாகும். மாறாக யூத கிறிஸ்தவர்கள் சென்ற பாதைகள் அல்ல என்பது இவ்வசனத்தின் கருத்தாகும்.

இவ்வத்தியாயத்தை ஓதி முடித்ததும் (ஆமீன்) என்று கூறுவது நபிவழியாகும் ஆமீன் என்பதன் பொருள் இறைவா! எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக என்பதாகும்.