القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن البطاقات الإسلامية فهرس الموقع

கேள்வி 15 : ஸூறதுல் இக்லாஸை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?

பதில் : ஸூறதுல் இக்லாஸும்; அதன் விளக்கவுரையும் :

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

(1) குல் ஹுவல்லாஹு அஹத். (2) அல்லாஹுஸ்ஸமத். (3) லம் யலித், வலம் யூலத். (4) வலம் யகுல்லஹு குபுவன் அஹத். (ஸூறதுல் இக்லாஸ் : 1-4)

விளக்கவுரை (தப்ஸீர்) :

(1) (நபியே அவன் அல்லாஹ் ஒருவன்தான் எனக் கூறுவீராக!) கருத்து: அதாவது நபியே! அல்லாஹ் ஒருவன், அவனைத்தவிர உண்மையான கடவுள் வேறு யாருமில்லை.

(2) (அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன்) அதாவது, படைப்புகளின் தேவைகள் அவனை நோக்கியே உயர்த்தப்படுகின்றன.

(3) (அவன் யாரையும் பெறவுமில்லை, எவருக்கும் பிறக்கவுமில்லை.) அதாவது, அவனுக்கு சந்ததியோ பெற்றோரோ கிடையாது. அவன் அவை அனைத்தையும் விட்டு தூய்மையானவனாக உள்ளான்.

(4) (அவனுக்கு நிகராக யாருமில்லை). அவனின் படைப்பில் அவனுக்கு ஒப்பாக யாருமில்லை