القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن البطاقات الإسلامية فهرس الموقع

கேள்வி 16 : முகமலர்ச்சி என்றால் என்ன?

பதில் : மனிதர்களை சந்திக்கும் வேளை ஏற்படுகின்ற மகிழ்ச்சி புன்னகை, இரக்கம், சந்தோச வெளிப்பாடு ஆகியவைவைகளால் முகத்தில் தோன்றும் மலர்ந்த நிலையே முகமலர்ச்சி எனக் கூறப்படுகிறது.

அதாவது ஒரு மனிதனை சக மனிதர்களிலிருந்தும் அந்நியப்படுத்தும் விதத்தில் அவர்களுக்கு வெறுப்பேற்படுமாறு முகம் சுளித்து கடுகடுப்பாக இருத்தல் என்ற பண்பிற்கு எதிரானது.

இதன் சிறப்புக் குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றுள் பின்வருவன முக்கியமானவைகளாகும். அபூதர் அல்கிபாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் பின்வருமாறு கூறினார்கள் : (அபூதர்ரே!) நன்மையான காரியங்கள் எதுவாயினும் அவற்றை அற்பமாகக் கருதாதே! அது உனது சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே!'. (ஆதாரம் : முஸ்லிம் .) மேலும் நபி (ஸல்) கூறினார்கள் : உனது சகோதரனின் முகத்தைப்பார்த்து புன்னகைப்பதும் உனக்கு தர்மமாகும்'. (ஆதாரம் : திர்மிதி).