القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن البطاقات الإسلامية فهرس الموقع

கேள்வி: 4 : இஹ்ஸான் என்றால் என்ன? அதன் வடிவங்கள் யாது?

பதில் : இஹ்ஸான் என்பது அதி உயர்பண்பாடாகும். அது ஒரு அடியான் பெற்றிருக்க வேண்டிய அல்லாஹ்வின் தொடர் அவதானம் பற்றிய உணர்வையும், படைப்பினங்களுடன் நல்ல முறையில் நடந்து அவர்களுக்கு நன்மை செய்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : "நிச்சயமாக அல்லாஹ் அனைத்து விடயங்களிலும் நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை விதியாக்கியுள்ளான்". (ஆதாரம் : முஸ்லிம் .)

இஹ்ஸான் எனும் பண்பின் வடிவங்கள் சில பின்வருமாறு :

அல்லாஹ்வை வணங்கி வழிபடுதல் என்ற விடயத்தில் இஹ்ஸானைக் கடைப்பிடித்தல் என்பது அவனை வணங்குவதில் இக்லாஸ் எனும் உளத்தூய்மையை கடைப்பிடித்து ஓழுகுவதைக் குறிக்கும்.

சொல்லாலும் செயலாலும் பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்வது.

இரத்த உறவுகளுடனும் உறவினர்களுடனும் நல்ல முறையில் நடந்து உபகாரம் செய்தல்.

அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளல்.

அநாதைகள் மற்றும் ஏழைகளுடன் நல்ல முறையில் நடந்து உதவி உபகராரம் செய்தல்.

உம்மோடு மோசமான முறையில் நடந்து கொண்டவருடன் நல்ல முறையில் நடந்து கொள்தல்.

பேசும் போது அழகிய முறையில் பேசுதல்.

தர்க்கம் புரியும் போது அழகிய வழிமுறையைக் கடைப்பிடித்தல்

விலங்கினத்தோடு நல்ல முறையில் நடந்து கொள்தல்.