القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن البطاقات الإسلامية فهرس الموقع

கேள்வி : மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து சட்ட நிலைகளையும் விவரிக்குக?

பதில் :

1- வாஜிப் கட்டாயம் செய்யவேண்டியவை என்பதற்கு உதாரணங்கள் ஜவேளைத் தொழுகை, ரமழானில் நோன்பு நோற்றல், பெற்றோருக்கு உபகாரம் செய்தல் போன்றவைகளாகும்.

வாஜிப் என்பது செய்தவருக்கு நற்கூலியும் செய்யாதவருக்கு தண்டனையும் வழங்கப்படுகின்ற இறை கட்டளையை குறிக்கும்.

2- முஸ்தஹப் விரும்பத்தக்கது என்ற சட்ட நிலைக்கான உதாரணம், பர்ழான தொழுகையின் முன் பின் ஸுன்னத்துக்கள், கியாமுல்லைல் தொழுகை, உணவளித்தல், ஸலாம் கூறுதல் போன்றனவாகும். முஸ்தஹப் என்பது ஸுன்னத் அல்லது மன்தூப் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

முஸ்தஹப் (விரும்பத்தக்கது) என்பது செய்தவருக்கு நற்கூலி வழங்கப்படுவதுடன் செய்யாதிருந்தவருக்கு தண்டனையேதும் வழங்கப்படாத இறை கட்டளைகளாகும்.

முக்கிய குறிப்பு :

ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை ஓரு விடயம் ஸுன்னா அல்லது முஸ்தஹப்பான செயல் என்று கேள்விப்பட்டால் அதனை நபியவர்களை பின்பற்றிச் செய்யவதற்கு விரைய வேண்டும். (இது சுன்னாதானே என பொடுபோக்காக இருத்தலாகாது. அவ்வாறு இருந்தால் காலப்போக்கில் அவர் கட்டாயக்கடமைகளையும் படிப்படியாக விட்டுவிடுகின்ற நிலை ஏற்படலாம்.)

3- 'அல் முஹர்ரம்'; முற்றாக தடுக்கப்பட்டது என்பதற்கான உதாரணம் : மது அருந்துதல், பெற்றோரை துன்புறுத்தல் , உறவுகளை துண்டித்து நடத்தல் போன்றவைகள்.

அல் முஹர்ரம்' குறிப்பிட்ட தடுக்கப்பட்ட விடயத்தை செய்யாதிருந்தால் மறுமையில் அதற்கான நற்கூலியும் அதனைச் செய்தால் தண்டனையும் கிடைக்கும்.

4- 'அல் மக்ரூஹ்' வெறுக்கத்தக்கவற்றிற்கு உதாரணம் : இடது கையால் ஒரு பொருளை எடுப்பதும் கொடுப்பதும் , தொழுகையில் ஆடையை மடித்துக் கொள்வது போன்றவைகளாகும்.

(அல் மக்ரூஹ்) என்பது குறிப்பிட்ட செயலை செய்யாதிருந்தால் மறுமையில் நற்கூலி கிடைப்பதுடன் அதனை செய்வதால் தண்டனை வழங்கப்படமாட்டாது.

5- 'அல்முபாஹ்' ஆகுமானவை என்பதற்கான உதாரணம் அப்பிள் பழம் சாப்பிடுதல், தேநீர் அருந்துதல் போன்றவைகளாகும். இது 'ஜாஇஸ்'; 'ஹலால்'; என்ற பெயர்களாலும் அழைக்கப்படும்.

குறிப்பிட்ட ஆகுமான (முபாஹ்) விடயத்தை விட்டுவிடுவதால் மறுமையில் நற்கூலியோ அதனை செய்வதால் தண்டணையோ கிடைக்கமாட்டாது என்பதைக் குறிக்கும்.