القرآن الكريم المصحف الإلكتروني إذاعات القرآن صوتيات القرآن البطاقات الإسلامية فهرس الموقع

கேள்வி 26 : வாகனத்தில் ஏறும் போது ஓதும் துஆ எது?

பதில் : பிஸ்மில்லாஹ், வல்ஹம்துலில்லாஹ் "ஸுப்ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹூ முக்ரினீன், வஇன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்", அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர், ஸுப்ஹானகல்லாஹும்ம இன்னி ழலம்து நப்ஸீ பஃபிர்லீ பஇன்னஹு லா யஃபிருத்துனூப இல்லா அன்த. பொருள் : 'பிஸ்மில்லாஹ்'; - அல்லாஹ்வின் திருப்பெயர்கூறி இப்பயணத்தை ஆரம்பிக்கிறேன் 'அல்ஹம்து லில்லாஹ்' எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. இதன் மீது ஏற எவ்விதச் சக்தியுமற்றவர்களாக இருந்த எமக்கு இதனை வசப்படுத்தித் தந்த அல்லாஹ் மிகத்தூயவன் எனத் துதிக்கிறேன். நிச்சயமாக நாம் எங்கள் இரட்சகனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்களாக உள்ளோம். (அல்ஹம்து லில்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), (3 தடவை) அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) ( 3 தடவை). யா அல்லாஹ்! நீ தூயவன்! எனக்கே நான் அநீதி இழைத்து கொண்டேன்! நீ என்னை மன்னித்தருள்வாயாக! ஏனெனில் பாவங்களை மன்னிப்பவன்; உன்னைத் தவிர வேறு யாருமில்லை. ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.