English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

அல்லாஹ் இரக்கமுள்ளவன் எல்லா நன்மைகளுக்கும் அடிப்படைக்காரணமாக இருப்பவன். ஆகவே அவன் எம்மனைவரையும் எவ்வித விசாரணையுமின்றி சுவர்க்கத்தில் நுழைவிக்காதது ஏன்?

உண்மையில், அல்லாஹ் தனது அடியார்கள் அவனைவரும் தன்னை விசுவாசிக்க வேண்டும் என விரும்புகிறான்.

"எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிகிறான்". (அஸ்ஸுமர்:7) تقدم

இருப்பினும், அல்லாஹ் எவ்வித விசாரணையுமின்றி அனைவரையும் சொர்க்கத்திற்கு அனுப்பினால், நீதி வெளிப்படையாக மீறப்படும். அத்துடன் அல்லாஹ் தனது தீர்க்கதரிசி மூஸா (மோசஸ்) மற்றும் கொடுங்கோலன் பிர்அவனுக்கும் இதே வழிமுறையை பின்பற்ற நேரிடும். அது மாத்திரமின்றி ஒவ்வொரு அடக்குமுறையாளனும் -அநியாயக்காரனும்- அவனால் பாதிக்கப்பட்டோரும் எதுவும் செய்யாதது போல் சொர்க்கத்தில் நுழைவர். ஆகவே சொர்க்கத்தில் நுழைபவர்கள் தகுதியின் அடிப்படையில் நுழைவதை உறுதி செய்வதற்கான ஒரு பொறிமுறையின் தேவை உள்ளது.

இஸ்லாமிய போதனைகளின் அழகு என்னவென்றால், அல்லாஹ் நம்மை விட நம்மை பற்றி நன்கு அறிந்துள்ளான். எனவே அவனுடைய திருப்தியை பெற்று சுவர்க்கம் நுழைவதற்கு தேவையான உலகில் அவசியம் பின்பற்றி ஒழுக வேண்டிய விடயங்களை எமக்கு அறிவித்துத் தந்துள்ளான்.

"எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப் படுத்தமாட்டான்". (அல் பகரா : 286). تقدم

PDF