English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்குர்ஆனை தவ்ராத்திலிருந்து பிரதி செய்தாரா?

அவ்வாறு தவ்ராத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டு யூதர்களிடமிருந்து இந்த அல்குர்ஆன் வந்திருந்தால் மனிதர்களில் அதனை தங்களுக்குரியது என்பதாக உரிமை பாராட்டுவதில் அவர்கள் முந்திக்கொண்டிருப்பர். வேத இறைவெளிப்பாடு (வஹி) இறங்கிய காலத்தில் இவ்வாறான வாதமொன்றை அவர்கள் முன்வைத்தனரா என்று நாம் கேள்வியெழுப்பினால் அதற்கு இல்லையென்பதே பதிலாகும்.

அத்துடன் இன்னோரு வகையில் சிந்திப்பின், தொழுகை ஹஜ் மற்றும் ஸகாத் போன்ற ஷரீஆ மற்றும் கொடுக்கல்வாங்கல் சட்டங்கள் வித்தியாசப்படுபவனாக இல்லையா? மேலும், மற்ற வேதங்களுடன் ஒப்பிடுகையில் குர்ஆனின் தனித்துவம் மற்றும் அதன் மனிதகையாடல்களுக்கு உட்படாத தன்மை மற்றும் அறிவியல் அற்புதங்களை உள்ளடக்கியது குறித்து முஸ்லிமல்லாதவர்களின் சாட்சியத்தை நோக்க வேண்டியதும் அவசியமாகும். ஒரு கொள்கையுடையவர் தன்னுடைய கொள்கைக்கு முரணான ஒரு கோட்பாட்டினை சரியென ஏற்றுக்கொண்டால், அதுவே அதன் உண்மைக்கு மிகப்பெரிய சான்றாகும். ஆகவே அகிலத்தாரிடமிருந்து கிடைத்த ஒரே தூதாக இது இருப்பதால் இது ஒன்றாக இருப்பதே அவசியமாகும். நபியவர்கள் கொண்டுவந்த இவ்விறைவேதமானது மோசடிக்கான ஆதாரமன்று! மாறாக அவரின் நேர்மைக்கான ஆதாரமாகும். அல்லாஹ் அறபு அணியிலக்கினக்கலையில் திறன்மிக்கோராக கருதப்பட்ட அறபுகள் மற்றும் அறபுகள் அல்லாதோரிடமும் இவ்வேதத்தைப் போன்ற அல்லது இது போன்று ஒரு வசனத்தையேனும் கொண்டு வருமாறு சவால் விடுத்தான். அவர்கள் அச்சாவாலுக்கு முகம் கொடுக்க இயலாது தோற்றுப்போனார்கள் என்பதே வரலாறாகும். அந்த சவால் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!.

PDF