English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

இஸ்லாம் தற்கொலை நடவடிக்கைளை அனுமதித்து அதற்காக அவர்களுக்கு சுவர்க்கத்தில் ஹுருல் ஈன் பெண்களை பரிசாக வழங்குகிறதா?

உயிரை கொடையாய் அளித்தவன், உயிரைப்பெற்றவனிடம் அதனை அழித்துக்கொள்ளவும் எந்தக்குற்றமுமின்றி உள்ள அப்பாவிகளின் உயிர்களை துவம்சம் செய்யவும் உத்தரவு பிரப்பிப்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். உயிரை கொடையாய் அளித்த வல்லோன் இவ்வாறு கூறுகிறான்: ''உங்களின் உயிர்களை நீங்களே மாய்த்துக்கொள்ள வேண்டாம்''. (அந்நிஸா:29). - இவ்வசனமும் இதுபோன்ற அதிகமான வசனங்களும் மதத்திற்கோ அதன் நோக்கங்களுக்கோ தொடர்பில்லாத குழுக்களின் நலனுக்காக, புனிதங்களை மீறாமல், ஒருவரின் உயிரைப் பணயம் வைக்காமல் அல்லது அழிவுக்கு உட்படுத்திக் கொள்ளாமல், பழிவாங்குதல் அல்லது அத்துமீறலைத் தடுத்தல் போன்ற நியாயமான காரணங்களுக்காக அன்றி ஒரு உயிரைக் கொல்வதை தடைசெய்கிறது. இதுவே இந்த மகத்தான மார்க்கத்தின் உயரிய நெறிமுறையாகும். ஹுருல்ஈன் பெண்களை அடைந்துகௌ்ளல் எனும் குறுகிய நோக்கத்திற்காக மாத்திரம் சுவர்க்கம் நிறுவப்பட வில்லை. சுவர்க்க இன்பம் என்பது கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத, எந்த மனிதனின் உள்ளத்திலும் உதித்திராத பேரின்பமாகும். تقدم

பொருளாதார சூழ்நிலைகள், திருமணம் முடிப்பதற்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இன்றைய இளைஞர்களே இச்சிந்தனையை ஊக்குவிப்போரின் பசப்பு வார்த்தையில் மயங்கி இவ்வாறான ஈனத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்செல்கிறார்கள். குறிப்பாக போதைப்பொருளுக்கு அடிமையானோர் மற்றும் மனக்குழப்பத்திற்கு ஆற்பட்டோர் இதில் அடங்குவர். ஆக,இவ்வாறான கருத்தை ஊக்குவிப்போர் உண்மையாளர்களாக இருந்தால் இப்பணிக்காக இளைஞர்களை அனுப்பமுன் தாங்களே இதனை செய்வதற்கு முன்வர வேண்மல்லவா.!

PDF