English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

இஸ்லாத்தில் ஒரு ஆண் பெறும் வாரிசு –அனந்தரச் சொத்தில் அரைவாசியை பெண் பெறுவது ஏன்?

இஸ்லாம் வருவதற்கு முன்பு பெண்களுக்கு வாரிசுரிமை பறிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இஸ்லாம் வந்தபோது, வாரிசுரிமையில் பெண்களையும் உள்ளடக்கியது. உண்மையில், அவர்கள் ஆண்களுடன் ஒப்பிடும்போது சமமான அல்லது அதிக பங்குகளைப் பெறுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில், பெண்கள் வாரிசுப்பங்குகளை பெரும் நிலையில் அவை ஆண்களுக்கு கிடைக்காத சந்தர்ப்பங்கள் உண்டு. அதாவது அந்நிலைகளில் பெண்களே வாரிசுப்பங்குகளைப் பெறுகின்றனர். குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வேறு சில நிலைகளில் உறவு முறை மற்றும் பரம்பரை ரீதியிலான நெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்கள் வாரிசுத் சொத்தில் அதிக விகிதத்தைப் பெறுவர்.

''இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்''. (அந்நிஸா : 11). تقدم

ஒரு முஸ்லிம் பெண் தனது கணவரின் தந்தை இறக்கும் வரை இந்த விடயம் புரியவில்லை என்ற தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கணவனின் சகோதரி பெற்ற தொகையின் இரு மடங்கு தொகையை தனது கணவர் பெற்றார் என்று கூறுகிறாள். எனவே அவர் தனது சொந்த குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கவும், கார் வாங்கவும் இந்த வாரிசுச் சொத்தைப் பயன்படுத்தினார். அதே வேளை வீடு மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்வது கணவனின் பொறுப்பு என்பதனால், அவரது சகோதரி தனது வாரிசுத்சொத்தில் கிடைத்த பங்கின் மூலம் நகைகளை வாங்கி, மீதமுள்ள தொகையை வங்கியில் சேமித்து வைத்தார். அந்த நேரத்தில், இந்த தீர்ப்பின் பின்னால் உள்ள ஞானத்தை அவள் புரிந்துகொண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன் என்று கூறினாள்.

பல சமூகங்களில் பெண்கள் வேலை செய்து தங்கள் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள முயன்றாலும், வாரிசுரிமையில் எவ்விதப் பாதிப்பையும் அது ஏற்படுத்திடமாட்டாது. எடுத்துக்காட்டாக, ஒருவர் கைபேசியை இயக்குவதற்கான அறிவுறுத்தல்களைப் பின்பற்றாது தனது கைபேசியில் கோளாறு –செயலிழப்பு- ஏற்பட்டால் அது அறிவுறுத்தல்களில் உள்ள குறைபாட்டை பிரதிபலிக்காது என்பதே யதார்த்தமாகும்.

PDF