English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

அண்டைவீட்டார் உரிமைகள் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன் என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். அப்போது அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் எவனுடைய தீங்கிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்தான் என்று பதிலளித்தார்கள்".(புஹாரி, முஸ்லிம்). تقدم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அண்டைவீட்டாரே தனது அண்டைவீட்டாரின் சொத்தை வாங்குவதற்கு மிகவும் அருகதை உடையவர். (வேறு நபர் ஒருவர் குறித்த சொத்தை உடமையாக்கிக்கொண்டால் அதனை பலவந்தமாக எடுப்பதற்கும் உரிமைபெற்றவராக அண்டை வீட்டார் மாறிவிடுகிறார்;). குறித்த நிலத்திற்கு செல்லும் பாதை ஒன்றாக இருந்து அண்டைவீட்டார் இல்லாதிருந்தால் அவருக்காக காணி உரிமையாளர் எதிர்பார்த்திருத்தல் வேண்டும்'' (முஸ்னதுல் இமாம் அஹ்மத்). تقدم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அபூதர்ரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!". (ஆதாரம் : முஸ்லிம்). تقدم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஒருவரிடம் நிலமிருந்து அதனை விற்க நாடினால் அதனை தனது அண்டைவீட்டாரிடம் முன்வைக்கட்டும்'' (ஆதாரம் இப்னு மாஜஹ், இது ஆதாரபூர்வமான ஹதீஸாகும்). تقدم

PDF