English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

கேள்வி 18 : பித்அத் என்றால் என்ன? அதனை நாம் ஏற்கலாமா?

பதில் - பித்அத் என்பது நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் காலத்தில் இல்லாத ஒன்றை மார்க்கத்தில் மனிதர்கள் புதிதாக தோற்றுவித்த அனைத்தையும் குறிக்கும்.

இவ்வாறு மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்டவற்றை ஏற்றுக்கொள்ளாது புறக்கணிப்போம்.

ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் : "(மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்படும் எல்லா பித்அத்துக்களும் (நூதன அனுஷ்டானங்களும்) வழிகேடாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆதாரம் : அபூதாவூத்

இதற்கான உதாரணங்களாக வணக்கத்தில் குறிப்பிடப்பட்ட வற்றிற்கு மேலதிகமாக செய்தலை குறிப்பிடலாம். அதாவது வுழு செய்கின்ற போன்று நாளாவது முறை உறுப்புகளை கழுவுதல், அதே போன்று நபியவர்களின் பிறந்த தின விழாக் கொண்டாடுதல், இவற்றிற்கான வழிகாட்டல்கள் நபியவர்களிடமிருந்தோ அல்லது அவர்களது தோழர்களிடமிருந்தோ கிடைக்கவில்லை.