English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

கேள்வி 19 : அல்வலாஉ (நேசம் வைத்தல்) வல்பராஉ (நீங்கிக்கொள்ளல்-விலகி நடத்தல்-) கோட்பாடு குறித்துக் குறிப்பிடுக?

பதில் : அல்வலாஉ (நேசம் வைத்தல்) என்பது முஃமின்களை -இறைவிசுவாசிகளை- நேசித்து அவர்களுக்கு உதவிபுரிதல் ஆகும்.

அல்லாஹ் கூறுகிறான் : "நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் அவர்களில் சிலர் மற்றும் சிலருக்கு உதவியாளர்களாவர்". (ஸூறதுத் தவ்பா:71).

அல்பராஉ' : என்பது (உபதேசம், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதன் மூலம் நேர்வழியை தெளிவுபடுத்தியதன் பின்) இறை நிராகரிப்பாளர்களை அல்லாஹ்வுக்காக வெறுத்து தூரமாக விலகிக் கொள்ளலை குறிக்கும்.

அல்லாஹ் கூறுகிறான் : "நிச்சயமாக இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. அவர்கள் தமது சமூகத்தாரிடம் நிச்சயமாக நாம் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதை விட்டும் விலகிக் கொண்டவர்களாவோம். உங்களை நாம் நிராகரித்து விட்டோம். மேலும் நீங்கள் அல்லாஹ் ஒருவனை ஈமான் கொள்ளும் வரையில் எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் பகைமையும், விரோதமும் என்றென்றும் ஏற்பட்டுவிட்டது!". (ஸூறதுல் மும்தஹினா :4)