English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

கோள்வி 22 : நிபாக் (நயவஞ்சகம்) என்றால் என்ன? அதன் வகைகள் யாது?

பதில் : நிபாக் என்றால் நயவஞ்சகம் என்பது பொருளாகும். அது இரு வகைப்படும : அந்நிபாகுல் அக்பர் (பெரிய நிபாக்) அந்நிபாகுல் அஸ்கர் (சிறிய நிபாக்).

1. அந்நிபாகுல் அக்பர் (பெரிய நயவஞ்சகத்தனம்) என்பது உள்ளத்தில் (குப்ரை) இறைநிராகாரிப்பை மறைத்து வெளிப்படையில் இறைவிசுவாசத்தை வெளிக்காட்டுவதாகும்.

இவ்வகை (குப்ர்) நிராகரிப்பு இஸ்லாத்ததை விட்டும் முழுமையாக ஒரு மனிதனை வெளியேற்றிவிடுகிறது. இது பெரியவகை இறைநிராகரிப்பில் (அல்குப்ருல் அக்பர்) உள்ள ஒன்றாகும்.

அல்லாஹ் கூறியுள்ளான் : "நிசயமாக நயவஞ்கர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஒரு உதவியாளரையும் நீர் காணமாட்டீர்". (ஸூறதுன்னிஸா :145)

2- அந்நிபாகுல் அஸ்கர் : சிறிய நிபாக்

இதற்கு உதாரணமாக பொய் கூறுதல், வாக்கிற்கு மாறு செய்தல் அமானித மோசடி (நம்பிக்கைத் துரோகம்) ஆகியவற்றைக் கூறலாம்.

இவ்வகை நிபாகானது இஸ்லாத்தை விட்டு வெளியேற்றிவிடாது. இது பாவமாக கருதப்படும், இச்செயலை செய்வோர் தண்டனைக்கு உட்படுவர்.

நபி (ஸல்) அவர்கள் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் : நயவஞ்கனின் அடையாளம் மூன்று : பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறுசெய்வான், நம்பினால் துரோகம் இழைப்பான்'. (புஹாரி, முஸ்லிம்)