English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

கேள்வி 1 : 'அத்தஹாரா' (சுத்தம்) என்பதை வரைவிலக்கணப்படுத்துக?

பதில் : 'அத்தஹாரா' என்பது தொடக்கை நீக்கி, அழுக்கை அகற்றுதல் என்பதாகும்.

அழுக்கை அகற்றி துய்மைப்படுத்தல் என்பது ஒரு முஸ்லிம் தனது மேனியில் அல்லது ஆடையில் அல்லது தரையில் மற்றும் அவன்தொழுமிடத்தில் ஏற்பட்ட நஜிஸை –அழுக்கு அசுத்தம் போன்றவற்றை –அகற்றுவதாகும்.

தொடக்கிலிருந்து தூய்மைபெறுதல் (தொடக்கை நீக்குதல்) என்பது பரிசுத்தமான நீரினால் வுழு செய்தல், மற்றும் குளித்தல். நீர் கிடைக்காவிட்டால் அல்லது நீரைப் பயண்படுத்துவது சிரமமாக இருப்பின் தயம்மும் செய்வதன் மூலம் தொடக்கிலிருந்து விடுபடுவதைக் குறிக்கும் (தொடக்கு என்பது மனிதன் தனது உடலில் உணரக் கூடிய,உடலிருந்து வெளியாகக்கூடிய அசுத்தமானவைகளைக் குறிக்கும். இதிலிருந்து தூய்மை பெற குளித்தல் வுழு செய்தல் அல்லது தயம்மும் செய்தல் போன்ற விடயங்களை அசுத்ததின் நிலைக்கேட்ப மேற்கொள்ளுதல் வேண்டும்) (பெயர்பாளர்).