English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

கேள்வி 21 : தொழுகையின் ருகுன்களைக் (பர்ளுகளைக்) குறிப்பிடுக?

பதில் : தொழுகையின் (பர்ளுகள் ) 14 ஆகும். அவை பின்வருமாறு :

1- பர்ளான தொழுகையில் நின்று தொழ சக்தியுள்ளவர் நின்று தொழுதல்.

2- இஹ்ராம் தக்பீர், அதாவது அல்லாஹு அக்பர் எனக் கூறல்.

3- சூறா அல் பாத்திஹாவை ஓதுதல்.

4- ருகூஊ செய்தல். (குணிதல்) அதாவது முதுகை வலைத்து நேராக தலையை முதுகு மட்டத்திற்கு சமமாக முன்னோக்கி வைத்தல்.

5- ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்கு வருதல்.

6- இஃதிலாலில் நேராக நிற்றல். (ருகூவிற்குப்பின் நிலையாக நிற்றல்).

7- ஸுஜூத் செய்தல்: ஸுஜூதின் போது நெற்றி மற்றும் மூக்கு இரு உள்ளங்கைகள் முட்டுக்கால்கள் இரு கால் விரல்களின் உட்பகுதிகள் போன்றவை தரையில் படும் நிலையில் இருத்தல் வேண்டும்.

8- ஸுஜூதிலிருந்து இருப்புக்கு வருதல்.

9- இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமர்தல்.

வலது காலை நட்டி இடது காலை விரித்து அதன் மீது அமர்வதோடு அதனை கிப்லாவை நோக்கி வைப்பதும் ஸுன்னாவாகும்.

10- அனைத்து செயல் சார்ந்த பர்ளுகளிலும் தாமதித்திருத்தல்.

11- இறுதி அத்தஹிய்யாத்து

12-அதற்காக அமர்தல்.

13- ஸலாம் கூறுதல். அதாவது இரண்டு முறை 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்' என்று கூறுதல்.

14- இங்கு விபரிக்கப்பட்ட பர்ளுகளை (ருகுன்களை) சொல்லப்பட்ட ஒழுங்கு முறைப்படி கிரமமாகச் செய்தல். உதாரணத்திற்கு ஒருவர் ருகூஉ செய்வதற்கு முன் ஸுஜுத் செய்தால் அவரின் தொழுகை வீணாகி விடும். மறந்து செய்தால் மீண்டும் எழுந்து ருகூ செய்து விட்டு பின்னர் ஸுஜூத் செய்தல் வேண்டும்.