English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

கேள்வி : 3 : வுழுவின் சிறப்பு என்ன?

பதில் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் அல்லது இறைநம்பிக்கை கொண்ட அடியார் வுழு செய்யும்போது முகத்தைக் கழுவினால், இரு கண்களால் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன.

அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித் துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக வெளியேறுகிறார்". [இந்த ஹதீஸை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]