English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

கேள்வி 16: ஸூறதுல் பலகை ஓதி அதற்கான விளக்கத்தைக் குறிப்பிடுக?

பதில் : ஸூறதுல் பலகும் அதன் விளக்கவுரையும் :

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

(1) குல் அஊது பிரப்பில் பலக். (2) மின் ஷர்ரி மா கலக். (3) வமின் ஷர்ரி காசிகின் இஃதா வகப். (4) வமின் ஷர்ரின் னப்பாஸாதி பில்உகத். (5) வமின் ஷர்ரி ஹாஸிதின் இஃதா ஹஸத். (ஸூறதுல் பலக் 1-5)

விளக்கவுரை (தப்ஸீர்) :

(1) (அதிகாலை நேரத்தின் இரட்சகனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்). நான் வைகரையின் இரட்சகனிடம் பாதுகாப்பும் அடைக்கலமும் தேடுகிறேன் என நபியே நீங்கள் கூறுங்கள்.

(2) (அவன் படைத்தவற்றின் தீங்குகளிலிருந்தும்; (பாதுகாப்புத்

தேடுகிறேன்). நோவினை செய்யும் அனைத்து படைப்பினங்களின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத்தேடுகிறேன்)

(3) (இருள் படரும் போது ஏற்படும் தீங்கை விட்டும் அவ்விரவின் தீங்கிலிருந்தும்; (பாதுகாப்புத்தேடுகிறேன்)). கருத்து : இரவில் வெளிப்படும் மிருகங்கள் மற்றும் கள்வர்களின் தொல்லைகளை விட்டும் அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுகிறேன்.

(4) (மேலும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கைவிட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்)). முடிச்சுக்களில் ஊதி சூனியம் செய்யும் பெண்களின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புத்தேடுகிறேன்.

(5) (பொறாமைக்காரன் பொறாமைப் படும் போது ஏற்படும் அவனது தீங்கிலிருந்தும் (பாதுகாப்புத்தேடுகிறேன்.) மக்களுடன் வெறுப்புக் கொண்டு அவர்களுக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள அருள்கள் அழிந்து, நோவினை செய்திட வேண்டுமென விரும்பி பொறாமை கொள்ளும் பொறாமைக்காரனின் கெடுதியை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.