English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

கேள்வி 16 : வீட்டினுள் நுழையும் போதும் வெளியே செல்லும் போதும் கடைப்பிக்க வேண்டிய ஒழுங்குகளைக் குறிப்பிடுக?

பதில் : 1- வீட்டிலிருந்து வெளியேறும் போது வலது காலை முன்வைத்து வெளியேறுவேன், அப்போது பின்வரும் துஆவை ஓதிக்கொள்வேன் : (பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அஊது பிக அன் அழில்ல அவ் உழல்ல, அவ் அஸில்ல அவ் அவ் உஸல்ல, அவ் அழ்லிம அவ் உழ்லம, அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய). இதன் பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால் (புறப்பட்டுச் செல்கிறேன்), என் காரியங்களை அல்லாஹ்வின் மீது முழுமையாக ஒப்படைத்து அவன் மீது நம்பிக்கை வைத்து விட்டேன். மேலும், அல்லாஹ்வின் உதவியில்லாமல் எதிலிருந்தும்; தப்பிப்பதற்கான சக்தியோ வல்லமையோ எனக்குக் கிடையாது, யா அல்லாஹ்! நான் வழி தவறிச் செல்வதில் இருந்தும், அல்லது (பிறரால்) நான் வழிகெடுக்கப்படுவதிலிருந்தும், நான் தவறுசெய்வதை விட்டும் அல்லது (பிறரால்) நான் தவறுக்கு உட்படுத்தப்படுவதைவிட்டும், நான் பிறருக்கு அநீதி இழைப்பதை விட்டும்; அல்லது (பிறரால்) நான் அநீதி இழைக்கப்படுவதை விட்டும், நான் அறிவீனமாக நடந்துகொள்வதைவிட்டும் அல்லது (பிறர்) என்மீது அறிவீனமாக நடந்துகொள்வதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். 2- வீட்டினுள் நுழையும் வலது காலை வைத்து நுழைவேன் அவ்வேளை பின்வரும் திக்ரை ஓதுவேன் : (பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி கரஜ்னா வஅலா ரப்பினா தவக்கல்னா). பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு நுழைந்தோம். அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு வெளியேறினோம்.மேலும் எங்கள் காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து அவனின் மீதே நம்பிக்கை வைத்துள்ளோம்.

3- வீட்டினுள் நுழைய முன் மிஸ்வாக் செய்துகொள்வேன், பின் குடும்பத்தாருக்கு ஸலாம் கூறுவேன்.