English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

கேள்வி 3 : எவ்வாறு பெற்றோர்களுடன்; ஒழுக்கம் பேணி நடந்து கொள்வது?

பதில் :1- பாவ காரியங்கள் தவிர்ந்த நல்ல காரியங்களில் பெற்றோர்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளல்.

2- பெற்றோருக்கு பணிவிடை செய்தல்.

3- பெற்றோருக்கு உதவுதல்.

4- பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றுதல்.

5- பெற்றோருக்காக பிரார்த்தனை செய்தல்.

6- அவர்களுடன் உறவாடும் போது நல்ல முறையில் உறவாடுதல். மிகச்சாதாரன வார்த்தையாக கருதப்படுகின்ற 'சீ' என்ற வார்த்தையைக் கூட அவர்களுக்கு பாவிப்பதை தவிர்ந்து கொள்ளுதல்.

7- பெற்றோருடன் புன்சிரிப்போடு இருப்பதுடன் முகம் சுழித்து கடுகடுப்பாக இருக்கக் கூடாது.

8- பெற்றோரின் சப்தத்தைவிட எனது சப்தத்தை உயர்த்திப் பேசமாட்டேன், அவர்களின் பேச்சை காது தாழ்த்திக் கேட்பேன், அவர்கள் பேசும் போது அவர்களின் பேச்சுக்கு இடையூறு செய்யாது நடந்து கொள்வேன். அத்துடன் ஒரு போதும் அவர்களின் பெயர் கூறி அவர்களை அழைக்கமாட்டேன், அவர்களை எனது தந்தையே, எனது தாயே என இங்கிதமாக அன்பாக அழைப்பேன்.

9- எனது பெற்றோர் அறையில் இருக்கும் போது அனுமதிபெற்றே உள்ளே செல்வேன்.

10- பெற்றோரின் கையையும் தலையையும் முத்தமிடுதல்.