English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

கேள்வி : கருணை காட்டுதல் எனும் நற்குணத்தின் வடிவங்களைக் குறிப்பிடுக?

பதில் : வயதில் மூத்தோருக்கு கருணை காட்டுவதுடன் அவர்களை மதித்து நடந்து கொள்ளுதல்.

சிறியோர் மற்றும் குழந்தைகளுக்கு இரக்கம் காட்டுதல்.

வரியவர் எளியவர் தேவையுடைவர் ஆகியோருக்கு கருணை காட்டல்.

விலங்கினங்களுக்கு துன்பம் இழைக்காது உணவளிப்பதன் மூலம் கருணை காட்டல்.

இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு கூறினார்கள் : "முஃமின்கள் தங்களுக்கு மத்தியில் பரஸ்பரம் அன்பு காட்டுவதிலும் பாசத்தோடு நடந்து கொள்வதிலும் பரிவு காட்டுவதிலும் ஒரு உடலைப் போன்றவராய் காண்பீர். அந்த உடம்பில் ஏதாவது ஒரு உறுப்பிற்கு வலி ஏற்பட்டுவிட்டால் ஏனைய உறுப்புகளும் தூக்கமின்மையாலும் கஷ்டத்தாலும் அவதிப்படுகின்றன". ஆதராம் : புஹாரி முஸ்லிம். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இரக்கம் காட்டுபவர்களுக்கு ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்". ஆதாரம் : அபு தாவூத், திர்மிதி.