English Français Español Русский العربية português हिन्दी বাংলা اردو More languages▾ Site Index

கேள்வி 4 : தடைசெய்யப்பட்ட சில வகையான கொடுக்கல் வாங்கல் மற்றும் விற்பனை முறைகளைக் குறிப்பிடவும்?

பதில் :

1- மோசடி செய்தல். வியாபாரப் பொருளின் குறையை மறைத்து விற்றல் வியாபாரத்தில் மோசடி செய்வதில் உள்ளதாகும்.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், உணவு தானியம் விற்பனை செய்யும் ஒரு வியாபாரியை கடந்து சென்றார்கள். தங்களின் கரத்தை தானியக் குவியலுக்குள் நுழைத்தார்கள். உள்ளே ஈரப்பதம் தென்பட்டது. இது என்ன ஈரம் எனக் கேட்டபொழுது யாரசூலல்லாஹ் மழை பொழிந்து நனைந்து விட்டது என்றார். அதற்கு நபியவர்கள்: "அதை மக்கள் பார்த்து வாங்குவதற்காக மேலே வைக்க வேண்டாமா? எவர் மோசடி செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல" என்றார்கள். (ஆதாரம் : முஸ்லிம் .)

2- வட்டி: அதாவது ஒருவரிடம் ஆயிரம் ரூபாவை கடனாக வாங்கும் போது அதனை திருப்பி செலுத்தும் சமயம்இரண்டாயிரம் ரூபா கொடுப்பதாக் கூறி கடன் பெறுவது வட்டிசார்ந்த பரிவர்ந்தனை முறையாகும்.

அதாவது கடன் பெறும் போது பெற்றதை விட மேலதிகமாக தருவதாக நிபந்தனையிடுவது வட்டியாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்துள்ளான்". (ஸூறதுல் பகரா :275).

3- ஏமாற்றுதல் மற்றும் காணாத அல்லது அறியாத ஒன்றை விற்றல் வாங்குதல் : உதாரணமாக ஆட்டின் பால் மடியில் உள்ள பாலை உனக்கு விற்கிறேன். அல்லது நீர் நிலையொன்றைக் காட்டி இதில் உள்ள மீன்களை விற்கிறேன் என்று கூறி வியாபாரம் செய்தலைக் குறிக்கும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மோசடி வியாபாரத்தை தடை செய்தார்கள்' என ஹதீஸில் இடம்பெற்றுள்ளது. (ஆதாரம் : முஸ்லிம் .)